Sept 7

1:25 PM 0 comments
உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி கர்நாடகத்தில் பதட்டம்.



தீர்ப்பை எதிர்த்து மாண்டியாவில் முற்றுகை போராடடம்.


காவிரி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினர்.

தீர்ப்பையடுத்து கர்நாடகத்தைச் சேர்ந்த 139 நிறுவனங்களுக்கு சென்னையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தமிழகப் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம். தமிழகத்தில் அனைத்துக்கட்சி  கூட்டத்தைக் கூட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.


கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கர்நாடக அரச பேருந்துகளுக்கு தமிழக போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறார்கள்.

காவிரிப்பிரச்சினையில் கர்நாடக வாழ் தமிழர்கள் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாப்பளிக்க உள்துறை அமைச்சர் பரமேஸ்வரனிடம் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

கர்நாடகாவில் சாலைகளில் டயர்களை தீ வைத்து கொழுத்தி ஆர்ப்படடத்தில் ஈடுபட்டனர்.


காவிரிப்பிரச்சினையின் போது தமிழக கட்சிகள் புத்திசாலித்தனமாக ஒன்றிணைந்து கொள்கின்றனர். - முன்னாள் பிரதமர் தேவ கவுடா.


பெங்களூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்.
கர்நாடகா தமிழ்நாடு எல்லையில் பதட்டம் நிலவுவதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.


0 comments:

Post a Comment